UPDATED : ஜூன் 29, 2026 07:19 PM
ADDED : ஜூன் 29, 2026 07:00 PM
போடி:போடி அருகே சிலமலையில் வ.உ. சிதம்பரனார் அரசு அலுவலர் அறக்கட்டளை சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் சோனைமுத்து, பென்னிகுவிக் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அர்ஜுன் பெருமாள், வேளாளர் பெருமக்கள் சங்க தலைவர் செல்வம், பொருளாளர் பாண்டியன், முன்னாள் ஆசிரியர் வடமலைமுத்து முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை பொருளா ளர் குருநாதன் வரவேற்றார். 10ம் வகுப்பு, பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களு க்கு கல்வி பரிசளிப்பு வழங்கப்பட்டன. டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி துவக்க விழா நடந்தது. ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சேத்துரான், செல்வராஜ், கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
