ADDED : பிப் 12, 2026 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு பகுதியில் வலம் வரும் படையப்பா ஆண் காட்டு யானை ஒரு மாதத்திற்கும் மேலாக மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித் திரிகிறது. மாட்டுபட்டி பகுதியில் இரண்டு நாட்களாக முகாமிட்ட படையப்பா நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மாட்டுபட்டி அணையில் படகு குழாமுக்கு செல்லும் நுழைவு பகுதிக்கு சென்றது.
அங்கு ரேட்டோரம் இருந்த ஜான்சன், தட்டான், மாடையா கடைகளை சேதப்படுத்தியது. கடைகளில் இருந்த பழ வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை தின்றது.

