/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் காலி பாட்டில்கள் அகற்றம்
/
குமுளி மலைப்பாதையில் காலி பாட்டில்கள் அகற்றம்
ADDED : பிப் 07, 2026 06:28 AM
கூடலுார்: கூடலுார் வனத்துறை, கம்பம் மேற்கு வனச்சரகம், என்.எஸ்.கே.பி. பள்ளி மாணவர்கள் இணைந்து குமுளி மலைப்பாதையில் பாலிதீன் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொண்டனர். லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இருந்து குமுளி வனத்துறை சோதனைச் சாவடி வரை மலைப்பாதையின் இரு பகுதிகளிலும் கிடந்த 240 கிலோ பாலிதீன் கழிவுகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சேகரித்தனர்.
இது தவிர குடிமகன்கள் வீசிச் சென்ற 360 மது பாட்டில்களையும் சேகரித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள மறு சுழற்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். வனத்துறை பணியாளர்கள், என் எஸ்.கே.பி. பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். குமுளி மலைப்பாதையில் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

