ADDED : நவ 06, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கூடலுாரைச் சேர்ந்த இன்ஜினியர் சிலம்பரசன் 38. தனியார் நிறுவன ஊழியர்.
இவர் 2 நாட்களுக்கு முன் மாலையில் தேனி குன்னூர் வைகை ஆற்றுப் பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது போடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரை ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

