ADDED : நவ 04, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கூடலூரை சேர்ந்தவர் சிலம்பரசன் 38. இன்ஜினியர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை இவர் தேனி- குன்னூர் வைகை ஆற்றுப் பாலம் அருகே ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக போடியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் வந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற சிலம்பரசன் மீது ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.