ADDED : பிப் 27, 2026 07:37 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் 16 வது ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மதளை சுந்தரம் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
விழாவில் தேனி நகராட்சி கமிஷனர் பார்கவி கல்லுாரி ஆண்டு மலரை வெளியிட்டு பேசினார். விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் தர்மராஜன், துணை தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், ஆட்சிமன்றம், கல்லுாரி நிர்வாகக் குழு, நிறுவனங்களின் செயலாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
மூன்றாம் ஆண்டு கணிப்பொறி, அறிவியல், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 2025 -20-26 கல்வியாண்டின் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

