ADDED : ஜூன் 05, 2026 01:39 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜீஸ்ரகுமான் 40.
இதே தெருவைச் சேர்ந்த சேவுகபெருமாள் 28. அஜீஸ் ரகுமானிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அஜீஸ்ரகுமானிடம், நான் பெரிய ரவுடி எப்பக்கேட்டாலும் பணம் தரமாட்டேன் என கூறுகிறாய் என கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்து ரூ.200 யை பறித்தார்.
அருகில் இருந்தவர்கள் சத்தமிடவே ஓடிவிட்டார். அஜீஸ்ரகுமான் புகாரில் தென்கரை போலீசார் சேவுகபெருமாளை கைது செய்தனர்.
