sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

/

 நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

 நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

 நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


ADDED : நவ 19, 2025 06:22 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தரம் குறைவு எனக் கூறி விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்க மறுத்ததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

கூடலுார் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதில் நெல்லின் தரம் மற்றும் கலர் குறைவாக இருப்பதாக கூறி அதனை கொள்முதல் செய்ய அலுவலர்கள் மறுத்தனர். இதனால் விவசாயிகள் கடந்த 15 நாட்களாக குவித்து வைத்து காத்திருந்தனர். உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என நேற்று விவசாயிகள் திரண்டு முற்றுகையிட்டனர்.

நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு 2 நாட்களில் கொள்முதல் செய்வதாக உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us