/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்ணக்கரை -- மருதையனுார் ரோடு அமைக்க ஊரக வளர்ச்சி முகமை மெத்தனம் வனத்துறை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
/
கண்ணக்கரை -- மருதையனுார் ரோடு அமைக்க ஊரக வளர்ச்சி முகமை மெத்தனம் வனத்துறை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
கண்ணக்கரை -- மருதையனுார் ரோடு அமைக்க ஊரக வளர்ச்சி முகமை மெத்தனம் வனத்துறை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
கண்ணக்கரை -- மருதையனுார் ரோடு அமைக்க ஊரக வளர்ச்சி முகமை மெத்தனம் வனத்துறை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ADDED : அக் 17, 2025 01:58 AM

தேனி: ''அகமலை கண்ணக்கரை முதல் மருதையனுார் வரை ரோடு அமைக்கும் பணி ஊரக வளர்ச்சி முகமை மெத்தனத்தால் பணி நடைபெற வில்லை,'' என வனத்துறை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.
மாவட்ட வன அலுவலகத்தில் வன அலுவலர் அருண்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. உதவி வன பாதுகாவலர் சிசில்கில்பர்ட், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகா, விவசாயிகள் பங்கேற்றனர்.
சீனிராஜ்: வருஷநாடு காமராஜபுரம் முதல் கிழவன்கோவில் வரை உள்ள 3.5 கி.மீ., வனத்துறை இடத்தில் ரோடு சீரமைக்கவும், வாகனம் செல்ல அனுமதி வழங்கினால் 80 கி.மீ., சுற்றி விருதுநகர் செல்ல வேண்டிய நிலை வராது.
உதவி வன பாதுகாவலர்: உயரதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்: சாக்கலுாத்து மெட்டு ரோடு அமைப்பது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, எம்.பி., தங்கதமிழ்செல்வன் ஆய்வு செய்து மனுவும் வழங்கப்பட்டது. தேர்தல் வரும்போதெல்லாம் கட்சிகள் வாக்குறுதி தெரிவிக்கும் நிலையே உள்ளது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்: பொதுப்பணித் துறையின் மூலம் தொடர் பாலம் அமைக்கும் பணிகள் மட்டுமே நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உதவி வன பாதுகாவலர்: சாக்கலுாத்து பாதையில் உயர் தொடர் பாலம் அமைக்க ஒப்புதல் பெற்று தருவதாக எம்.பி., தெரிவித்திருந்தார். வனத்துறை சார்பில் பொதுப்பணித்துறை ஆய்வு செய்ய ஆட்சேபனை இல்லை என்பதை தெரிவித்து விட்டோம்.
வெற்றிவேல், அகமலை: கண்ணக்கரை முதல் மருதையனுார் வரை உள்ள ரோடு அமைக்க நில ஒப்படைப்பு செய்தும், ரோடு அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை போடுவதால் சிரமம் ஏற்படுகின்றன.
ஆதிரை, வனச்சரகர், பெரியகுளம்: 'பரிவேஸ்' இணைதளத்தில் விண்ணப்பித்து ஊரக வளர்ச்சி முகமை பணிகளை மேற்கொள்ளாமல் தொடர்ந்து காலம் தாழ்த்துவதால், தடையில்லா சான்று வழங்குவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டன. தற்போது மீண்டும் விண்ணப்பிக்க பரிந்துரைக்க வேண்டும்.
வெற்றிவேல்: பலமுறை விண்ணப்பித்துள்ளோம். ஊரக வளர்ச்சி முகமையின் மெத்தனத்தால் அரசியல் கட்சிகளின் வாக்குறுதியாக உள்ள கண்ணக்கரை ரோடு அமைக்காவிட்டால் எங்கள் கிராம ஊராட்சி மக்கள் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.