sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மலர் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

/

மலர் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மலர் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மலர் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : அக் 09, 2025 11:59 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலர் சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் பரவலாக மலர் சாகுபடி நடைபெறுகிறது. கம்பத்தை சுற்றியுள்ள கிராமங்கள், சின்னமனூர், சீலையம்பட்டி, பல்லவராயன்பட்டி, புலி குத்தி, அய்யம்பட்டி, சிந்தலச்சேரி, கோட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

மல்லிகை , சம்பங்கி, செண்டு, ரோஜா, செவ்வரளி உள்ளிட்ட பலவித பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

சீலையம்பட்டி, பல்லவராயன்பட்டி, மற்றும் கம்பத்தில் பூ மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு விதை , இடுபொருள்கள், ரொக்க மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் மலர் சாகுபடியாளர்களுக்கு எந்தவித மானியமும் வழங்குவதில்லை. சிறப்பு திட்டங்களும் இல்லை. நாளுக்கு நாள் மலர் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பூக்கள் அனுப்பப்படுகிறது.

பிற பயிர்களுக்கு போன்று மலர் சாகுபடி டியாளர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்கள் வழங்குவது , மானிய திட்டங்களை அறிவித்தால் சாகுபடி பரப்பு அதிகமாகும். மலர் சாகுபடியாளர்களை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீலையம்பட்டி மலர் சாகுபடியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us