ADDED : ஜூலை 26, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: குமுளி அருகே ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மீது, மரம் சாய்ந்து விழுந்ததில் பலியானார்.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்த சுதா 50, குமுளி அருகே உள்ள ஜக்குபள்ளம் ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரம் ஒடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து, சுதா இறந்தார். குமுளி போலீசார் விசாரிக்கின்றனர்.

