/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ADDED : நவ 25, 2025 01:41 AM

கம்பம்: சுருளி அருவியில் நேற்று காட்டாற்று வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கம்பம் பள்ளத்தாக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வருகிறது. மேகமலை பகுதியில் பகலில் சாரல் மழையும், இரவில் கன மழையும் பெய்து வருகிறது. கடந்த அக் . 14ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டது. அக் . 17ல் கனமழை பெய்து சுருளி அருவி பகுதியில் சேதம் ஏற்படுத்தியது. சேதத்தை சீரமைத்து பயணிகள் குளிக்க அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.
காலையில் வழக்கம் போல ரோந்து சென்ற ரேஞ்சர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் நேற்று காலை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தால் குளிக்க அனுமதி வழங்கப்படும் என ரேஞ்சர் தெரிவித்துள்ளார்.

