/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
27 இடங்களில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு வனத்துறை ஏற்பாடு
/
27 இடங்களில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு வனத்துறை ஏற்பாடு
27 இடங்களில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு வனத்துறை ஏற்பாடு
27 இடங்களில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு வனத்துறை ஏற்பாடு
ADDED : டிச 24, 2025 05:54 AM
ஆண்டிபட்டி: தேனி வனக்கோட்டத்தில் 27 இடங்களில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
தேனி வனக்கோட்ட கணக்கெடுப்பு பணிக்கான ஒருங்கிணைப்பாளர் ஆண்டிபட்டி ரேஞ்சர் அருள்குமார் கூறியதாவது:
தமிழக வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நீர் வாழ் பறவைகள் கணக் கெடுப்பு பணிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி டிசம்பர் 28ல் நடைபெறுகிறது.
தேனி வனக்கோட்டத்தில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கு 27 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பறவைகள் கணக்கெடுப்பு டிசம்பர் 28ல் காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடைபெறும்.
இந்த கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் ஈடுபடலாம். பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் முதலமைச்சரின் பசுமைத் தோழர் அஃப்ஷானா மற்றும் வனவர் திவ்யா ஆகியோரை 97154 60505 மற்றும் 80567 07624 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பறவைகள் கணக் கெடுப்பு பணியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமிழக வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் மூலம் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

