sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மேகமலையில் உறைபனி; பகலில் விலகாத பனிமூட்டம்

/

 மேகமலையில் உறைபனி; பகலில் விலகாத பனிமூட்டம்

 மேகமலையில் உறைபனி; பகலில் விலகாத பனிமூட்டம்

 மேகமலையில் உறைபனி; பகலில் விலகாத பனிமூட்டம்


ADDED : டிச 23, 2025 06:35 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மேகமலை பகுதியில் நிலவும் உறைபனி பகல் முழுவதும் நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.

தேனி மாவட்ட சுற்றுலா தலங்களில் மேகமலை முக்கிய இடம் பிடிக்கிறது. மூணாறுக்கு நிகராக சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பசுமையான தேயிலை தோட்டங்களும், ஹைவேவிசில் ஆரம்பித்து மணலாறு வரை ரோட்டை ஒட்டியே நீண்டு செல்லும் மணலாறு நீர் தேக்கமும், மலைமுகடுகளை தொட்டு செல்லும் மேக கூட்டங்களும், தண்ணீர் அருந்த, அணை பகுதிக்கு வரும் காட்டு யானைகள், மாடுகள் கூட்டமும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக சாரல்மழை பெய்தது. தற்போது உறைபனி நிலவுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பனி மூட்டமும் அதிகமாக உள்ளது.

இரவு மட்டுமின்றி பகலிலும் பனிமூட்டம் உள்ளது. இதனால் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும் இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராசா மெட்டு, தூவானம் பகுதிகளில் குறைந்துள்ளது.

இங்குள்ள அணைகளில் சேகரமாகும் தண்ணீரை பயன்படுத்தி தேவைக்கேற்ப காலை, மாலையில் சுருளியாறு மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us