ADDED : டிச 31, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி விக்சித் ஜிராம்ஜி என மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து தேனி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் துரைராஜ், நிர்வாகிகள் முனிராஜ், சின்னசாமி, துவாஸ், சக்தி திருமுருகன், அசோக்குமார், புருஷோத்தமன், அர்ஜூனன், சி.ஐ.டி.யு., ஜெயபாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

