ADDED : பிப் 14, 2026 06:01 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் படைப்பாற்றலை மேம்படுத்த ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஹேக்கத்தான் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இனோவேசன் திட்ட தலைமையாளர் சக்திவேல் காளியப்பன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச் செயலாளர் சுப்பிரமணி, தேனி மேலபேட்டை இந்து நாடார் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பெங்களூரு ஏ.எம்.சி., பொறியியல் கல்லுாரி பேராசிரியர் மாரீஸ்வரி, விசினரிஸ் நிறுவனத்தின் தவைலர் மதுமோகன், கோவை லேர்ன்லைக் நிறுவ இயக்குநர் ஜமுனாதேவி கணேசன், நிர்வாகி தீபக், வைசைர்ஸ்டாக் நிறுவன பொறியாளர் முகிலன், சென்னை ரெனாலட் குழும பொறியாளர் ஹரசுதன், எஸ்.டி.ஜி., இன்போடெக் இந்தியா நிறுவன பொறியாளர் ஹரிபிரசாத் உள்ளிட்டோர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

