ADDED : மார் 21, 2026 08:38 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உத்தமபாளையம் காமயகவுண்டன்பட்டியில் மகளிர் சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்குவாரிகளை செயல்படுத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட துணைத்தலைவர் ராசையா தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் ஞானவேல், கர்ணன், கல் உடைக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
