நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி 45, சரக்கு வாகனத்தில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு உதவியாக மனைவி சாந்தி 35, இருந்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன் திருப்பதி தனது மனைவியுடன் சரக்கு வாகனத்தில் கண்டமனூர் தக்காளி மார்க்கெட்டில் தக்காளி வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். சிப்காட் அருகே வரும்போது கன்றுக்குட்டி குறுக்கே வந்ததால் கட்டுப்பாடு இழந்த சரக்கு வாகனம் புளிய மரத்தில் மோதியது.
இதில் கணவன் மனைவி இருவரும் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விபத்து குறித்து கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.