sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டு யானைகளால் சேதம் அதிகரிப்பு

/

காட்டு யானைகளால் சேதம் அதிகரிப்பு

காட்டு யானைகளால் சேதம் அதிகரிப்பு

காட்டு யானைகளால் சேதம் அதிகரிப்பு


ADDED : மார் 15, 2024 06:38 AM

Google News

ADDED : மார் 15, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : மூணாறு பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றால் உயிர் பலிகள்ஏற்பட்டன. தவிர சேதங்களும் அதிகரித்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு பகுதிகளில் பலசரக்கு கடை, குடோன் ஆகியவற்றை சேதப்படுத்தின.

மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சியில் சொசைட்டிகுடியில் ரேஷன், பலசரக்கு ஆகிய கடைகள் ஒரே கட்டத்தில் செயல்படுகின்றன. அப்பகுதியில் நேற்று முன்தினம் ஏழு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் பகல் முழுவதும் விளை நிலங்களில் சுற்றித் திரிந்தன. அவை நள்ளிரவில் ரேஷன், பலசரக்கு கடைகள் அருகில் உள்ள குடோனின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அத்தியாவசிய பொருட்களை சிதறி விட்டு சேதப்படுத்தின.

அதே போல் மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான தேவிகுளம் எஸ்டேட் லோயர் டிவிஷனில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு வந்த ஆறு காட்டு யானைகளை கொண்ட கூட்டம் அங்கு பாலாஜியின் பலசரக்கு கடையின் ஜன்னல் கண்ணாடிகள், கதவு ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டு இரண்டு மூடை உப்பு, சோப்பு பொடி அடங்கிய பை ஆகியவற்றை தூங்கி சென்றன. தவிர பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் சேதப்படுத்தின.






      Dinamalar
      Follow us