ADDED : மார் 11, 2026 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே உப்புக்கோட்டை பச்சையப்பா நினைவு மழலையர், துவக்கப் பள்ளியில் 27 வது ஆண்டு விழா நடந்தது. பச்சையப்பா கல்வி குழும செயலாளர் லட்சுமிவாசன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பச்சையப்பராஜா, தேனி சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணக்குமார், வித்யா பாரதி மாநில பொதுச் செயலாளர் நல்லசிவன், பிரம்ம குமாரி சற்குணம் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ரஞ்சித்குமார் வரவேற்றார்.
திருப்பூர் கொடிகாத்த குமரனின் கொள்ளுப் பேரன் டாக்டர் மதன்குமார் சீனிவாசன் பேசுகையில், 'கல்வியால் மட்டுமே மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற முடியும். இனி வரும் காலங்களில் ஏ.ஐ., தொழில் நுட்ப கல்வியால் மாற்றங்கள் ஏற்படும்,' என பேசினார். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

