sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கம்பம் அரசு மருத்துவமனை மேற்கு நுழைவு வாயில் மூடல்: மக்கள் அவதி

/

 கம்பம் அரசு மருத்துவமனை மேற்கு நுழைவு வாயில் மூடல்: மக்கள் அவதி

 கம்பம் அரசு மருத்துவமனை மேற்கு நுழைவு வாயில் மூடல்: மக்கள் அவதி

 கம்பம் அரசு மருத்துவமனை மேற்கு நுழைவு வாயில் மூடல்: மக்கள் அவதி


ADDED : ஜன 01, 2026 05:41 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையின் மேற்கு வாயில் கதவு பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கம்பம் அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான வெளிநோயாளிகளும், 200 க்கும் மேற்பட்டடோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் உள்ளது.

இந்த மருத்துவமனைக்கு இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது. ஒன்று மெயின் நுழைவு வாயிலாகவும், மற்றொன்று மேற்கு பக்கம் வாயிலும் உள்ளது. மேற்கு வாயில் அருகில் சீமாங் சென்டர் உள்ளதால் பெரும்பாலும் கர்ப்பிணிகள் அந்த நுழைவு வாயில் வழியாக மருத்துவமனைக்கு வருகின்றனர்.

மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் உடல்களை மேற்கு வாயில் வழியாக தான் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும். இந்த மேற்கு நுழைவு வாயில் சில நாட்களுக்கு முன் மருத்துவமனை நிர்வாகம் திடீரென பூட்டியது.

இதனால் அவசர பேறு கால சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்கு வாயில் கேட்டை திறக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us