ADDED : செப் 08, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.9–
தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வருஷநாடு, மேகமலை மக்களை வெளியேற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முன்னிலை வகித்தார். துணை தலைவர்கள் கணேசன், ஆறுமுகம், பாண்டியராஜன், இணை செயலாளர்கள் லோகநாதன், தமிழ்மணி, துணை செயலாளர் வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
