ADDED : ஜன 29, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி வீரபாண்டி கலை அறிவியல் கல்லுாரி முன் விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட நிர்வாகி பேராசிரியர் ராஜூ தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் ரியாஸ் அகமது, வெங்கடேஷ், கண்ணன், பத்மா, சுபத்ரா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.