ADDED : ஜூன் 07, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் திருமால் 42.
அந்தப்பகுதியில் உள்ள மில்லில் லோடுமேனாக வேலை செய்தார். வேலை முடிந்து வீட்டிற்கு பொருட்களை வாங்கி கொண்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திருமால் சம்பவ இடத்திலேயே பலியானார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-