ADDED : ஜூலை 20, 2025 05:09 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழ வியாபாரி விக்னேஷ்வரன் 31. இவரது நண்பர்களுடன் பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் பெட்டிக்கடை அருகே சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சன்னாசி 41. மது பாட்டிலால் விக்னேஷ்வரனை தாக்கி, கொலை மிரட்டல்விடுத்தார். இதில் காயமடைந்த விக்னேஷ்வரன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். போலீசார் கைது செய்தனர்.-
