ADDED : அக் 01, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கம்பத்திலிருந்து குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் சென்றது.
கருநாக்கமுத்தன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே அரசுப் பள்ளி தெருவை சேர்ந்த பசும்பொன் 22, என்பவர் குடிபோதையில் பஸ் மீது கல் எறிந்ததில் பின்பகுதி கண்ணாடி உடைந்தது. அதே வழியாக வந்த கேரளா ஜீப் மீதும் கல் எறிந்ததால் கண்ணாடி உடைந்தது. கூடலுார் வடக்கு போலீசார் பசும்பொன்னை கைது செய்து விசாரிக்கின்றனர்.