ADDED : ஜன 24, 2026 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே கரியப்பகவுண்டன்பட்டி ஒக்கலிகர் தெருவை சேர்ந்தவர் மதன் பிரபு 46. பால் பண்ணை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தேவாரம் மெயின் ரோடு நாகலாபுரம் விலக்கில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது ஒருவர் டூவீலரை மறித்து,'தான் போடி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,,' என கூறி லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். நகலை காட்டிய போது ஒரிஜினல் கேட்டுள்ளார். தற்போது இல்லை என கூறிய போது
ரூ. 2 ஆயிரம் அபராதம் என கூறி பணம் பெற்று சென்றுள்ளார். சந்தேகம் அடைந்த மதன்பிரபு போலீசாரிடம் புகார் செய்தார். விசாரணையில் தேவாரம் லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் 42, என தெரிந்தது. போடி தாலுகா போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

