ADDED : ஏப் 16, 2025 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பொன்னையா 65,
தனது மனைவியுடன், மகன் அர்ஜுனன் தோட்டத்தில் இலவ மரத்தில் ஏறி காய்கள் பறித்துக் கொண்டு இருந்தார்.
எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனைவி காளியம்மாள் புகாரில் வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.