UPDATED : ஜூன் 08, 2026 07:34 PM
ADDED : ஜூன் 08, 2026 07:30 PM
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் கனகலட்சுமி 29, இவரது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து விட்டார். மகளுடன் இருந்த கனகலட்சுமி, 4 மாதங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த திருமுருகன் 24,னை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
ஆண்டிபட்டியில் மூவரும் வசித்தனர். ஜூன் 7 ல் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்த நீரை கீழே ஊற்ற திருமுருகன் முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பயந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த கனக லட்சுமி மெயின் சுவிட்ச்சை ஆப் செய்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் திருமுருகனை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
