ADDED : டிச 30, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சபரிமலை ஐயப்பன் மண்டல பூஜையை முன்னிட்டு தேனி அருகே பூதிப்புரத்தில் கார்த்திகை 1ல் மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள், கிராமத்தில் சுவாமி ஐயப்பன் சிலை,18 படிகள் அமைத்தும் தொடர்ந்து வழிபாடு நடத்தி பூஜை செய்து வந்தனர்.
சபரிமலை மண்டல பூஜை நிறைவு பெற்றதை முன்னிட்டு பூதிப்புரம் கிராம மக்கள் ஐயப்பன் சிலையை ஊர்வலமாக மாட்டுவண்டியில் உருவாக்கப்பட்ட ரதத்தில் எடுத்துச் சென்று வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூதிப்புரம் கிராம ஐயப்பன் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

