ADDED : நவ 26, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து 40. இவரது மனைவி சாந்தி 38.
இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரவில் தூங்கச் சென்றனர். இவர்களது மகன் மாரீஸ்வரன் 18. நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது சாந்தியை காணவில்லை.
இந்நிலையில் சோத்துப்பாறை அணை கீழ் பகுதி இரும்புபாலம் அருகே வராகநதியில் சாந்தி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
புகாரில் தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், சாந்தி எவ்வாறு இறந்தார் என விசாரித்து வருகிறார்.

