sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நுாலகம் வைத்திருப்போர்  விருது பெற விண்ணப்பிக்கலாம்

/

நுாலகம் வைத்திருப்போர்  விருது பெற விண்ணப்பிக்கலாம்

நுாலகம் வைத்திருப்போர்  விருது பெற விண்ணப்பிக்கலாம்

நுாலகம் வைத்திருப்போர்  விருது பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : பிப் 10, 2025 05:08 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: 'மாவட்டத்தில் சொந்த நுாலகங்களுக்கான விருது பெற பிப்.20க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: தமிழக அரசு வீடு தோறும் நுாலகங்கள் அமைக்க வேணடும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. சொந்த வீடுகளில் நுாலகங்கள்அமைந்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து, சொந்த நுாலங்களுக்கான விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் வீடுகளில் நுாலகம் அமைத்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி வரும் தீவிர வாசகர்களின் சொந்த நுாலகங்களுக்கான விருது பெற dlothn@1997gmail.com என்ற மின்னஞ்சலில் பிப்.20க்குள் விண்ணப்பிக்கலாம். அதன் பின் மாவட்ட நுாலக அலுவலர் தலைமையில் குழு அமைத்து, தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நுாலகங்களை நேரில் ஆய்வு செய்து, குழுவின் பரிசீலனைக்கு உட்பட்டு, மாவட்ட அளவில்சிறப்பாக பராமரிக்கப்படும் தனிநபர் இல்ல நுாலகம் ஒன்று தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்வான நுாலகத்தின் உரிமையாளருக்கு புத்தக திருவிழாவில் ரூ.3 ஆயிரம் மதிப்பில் கேடயம், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவார். எனவே இந்த நல்வாய்ப்பினை சொந்த நுாலகங்கள் வைத்துள்ளோர் பயன் படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us