sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 சீட்டுக்காக தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவில்லை இந்திய கம்யூ., மாநில செயலாளர் பேட்டி

/

 சீட்டுக்காக தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவில்லை இந்திய கம்யூ., மாநில செயலாளர் பேட்டி

 சீட்டுக்காக தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவில்லை இந்திய கம்யூ., மாநில செயலாளர் பேட்டி

 சீட்டுக்காக தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவில்லை இந்திய கம்யூ., மாநில செயலாளர் பேட்டி


ADDED : டிச 01, 2025 12:51 AM

Google News

ADDED : டிச 01, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: ''சீட்டுக்காக தி.மு.க.,வுடன் இந்திய கம்யூ., கூட்டணி வைக்கவில்லை,'' என, தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் அதன் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: எத்தனை சீட்டுக்கள் கொடுத்தாலும் அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேர மாட்டோம். தி.மு.க.,வுடன் இந்திய கம்யூ., கட்சி கொள்கை கூட்டணி வைத்துள்ளது. த.வெ.க., கொள்கை இல்லாத கட்சி. அந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் நாங்கள் தொடர்ந்து தி.மு.க., கூட்டணியில் தான் இருப்போம். பா.ஜ.,வை எதிர்க்கும் கொள்கையுடன் தி.மு.க.,வுடன் உள்ளோம்.

தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது பணமோ அல்லது வலுவானவர்களோ கிடையாது. ஏழை சாமானிய மக்கள் தான் தீர்மானிக்கின்றனர். சீட்டை காட்டி, நோட்டை காட்டி எங்களை ஏமாற்ற முடியாது. யாருடைய கூட்டணியையும் பார்த்து எங்கள் கூட்டணி அஞ்சாது. கவர்னர் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எழுப்பும் குரலுடன் சேர்ந்து எங்கள் குரலும் தொடர்ந்து ஒலிக்கும். இது தமிழக மக்களுக்கான குரலாகும் என்றார்.






      Dinamalar
      Follow us