ADDED : அக் 19, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் 48. தென்கரை ரமணா ஏஜென்சியில் சேல்ஸ் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார்.
பெரியகுளம் தேனி ரோடு டி.வி.எஸ்., ஷோரூம் அருகே, அதி வேகமாக ஆஜாக்கிரதையாக வந்த டூவீலர், ஜெகதீசன் டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார்.
விபத்து ஏற்படுத்திய தாமரைக்குளம் ஜி.டி., நாயுடு தெருவைச் சேர்ந்த ஜெரோமிடம் 27. தென்கரை எஸ்.ஐ., இதிரிஸ்கான் விசாரணை செய்து வருகிறார்.