ADDED : டிச 19, 2025 05:44 AM

தேனி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை இயக்கம் சார்பில் தனிசெயலி ஏற்படுத்தித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில இணைச்
செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜன், சேகரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பிச்சை, தணிக்கையாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ்,மாவட்டச் செயலாளர் பிரகாஷ், முன்னாள் மாவட்டத் தலைவர் கனகராஜ், நிர்வாகிகள் இப்ராஹிம், கதிரேசன், தாமோதரன், சிவமணி, சுருளியாண்டி ஆகியோர் பேசினர். ஒய்வூதியர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி நிறைவுறை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் நன்றி தெரிவித்தார்.

