ADDED : அக் 02, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமி. இவரை வடுகபட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வரதன் 20. காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு வரதன் தந்தை திருமுருகன், தாயார் தமிழ்செல்வி, உறவினர்கள் பாண்டி, அவரது மனைவி லட்சுமி உதவியுள்ளனர். சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். பெரியகுளம் ஒன்றியம் ஊர்நல அலுவலர் மாரியம்மாள் புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் மகாலெட்சுமி, வரதன் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.