sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : அக் 04, 2025 04:15 AM

Google News

ADDED : அக் 04, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம் பெண் மாயம்தந்தை போலீசில் புகார்

சின்னமனூர்: ஓடைப்பட்டி அருகே உள்ள கரிச்சிபட்டி காலனியில் வசிக்கும் பால்பாண்டி மகள் பாண்டீஸ்வரி 21, கரிச்சி பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் கேரளாவில் உள்ள தனது பெற்றோரை பார்த்து வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் பெற்றோர் வீட்டிற்கு செல்லவில்லை. மகளை பார்ப்பதற்காக பால்பாண்டி கரிச்சி பட்டிக்கு வந்துள்ளார். அங்கு மகள் இல்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகாரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மகள், மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

உத்தமபாளையம்: உ.புதூர் திடீர் நகரில் வசித்தவர் ராஜா 47, இவரது மனைவி செல்வராணி 48. இவர்களுக்கு இரு மகன்களும், பிரியா, ஜெனிபர் என்ற இரு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரையும் கோடாங்கிபட்டியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அக் முதல் தேதியில் இரு மகள்களும் கணவருடன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளனர்.

இளைய மகள் ஜெனிபர் தனது தந்தையுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் தனது கணவருடன் கோடாங்கிபட்டிக்கு சென்றார். மனைவியும் கோபித்து கொண்டு மகளுடன் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ராஜா விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்த்து பலனின்றி இறந்தார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்

உத்தமபாளையம்: தண்ணீர் தொட்டி தெரு பீர்முகமது 31, இவரது மனைவி ஜீனத் அப்ரோஸ் 29, இவர்களுக்கு 3வயதில் மகள் உள்ளார். பீர்முகமது கம்பம் பல சரக்கு கடையிலும், மனைவி மருந்து கடையிலும் வேலை செய்தனர். கடந்த அக் முதல் தேதி தனது மகளுடன் வேலைக்கு சென்று வருவதாக கூறி மனைவி சென்றுள்ளார். அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பீர்முகமது தனது மனைவி வேலை செய்த மருந்து கடையில் சென்று விசாரித்த போது அவர் வேலைக்கு வரவில்லை என தெரிந்தது. பீர்முகமது தனது மனைவி, மகளை காணவில்லை என என்ற புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி திருமணம் ஒருவர் மீது போக்சோ

பெரியகுளம்: பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமி. இவரை சருத்துபட்டி முத்தையா கோயில் தெருவை சேர்ந்த கோபி 23. காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக உள்ளார். பெரியகுளம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் போதுமணி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் கோபி மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.

காந்தி ஜெயந்தி நாளில்

மது விற்ற 6 பேர் கைது

பெரியகுளம்: வடகரை காந்திநகரைச் சேர்ந்தவர் தங்கவேல் 46. காந்தி ஜெயந்தியன்று பூட்டியிருந்த வடுகபட்டி டாஸ்மாக் கடை முன்பு 41 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். தேவதானப்பட்டி தெற்குதெரு ராக்கம்மாள் 55. உறவினர் ராமபாண்டி 35, இருவரும் 23 மது பாட்டில்களை தேவதானப்பட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தனர். சருத்துப்பட்டி கிழக்கு தெரு நாகராஜ் 43, பெட்டிக்கடையில் 34 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். எருமலைநாயக்கன்பட்டி பாஸ்கர் 45, பஞ்சராஜா 49 இருவரும் அவரவர் பெட்டிக்கடையில் தலா 5 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். இவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us