sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏழு கடன் செயலிகளை நீக்க போலீஸ் பரிந்துரை

/

ஏழு கடன் செயலிகளை நீக்க போலீஸ் பரிந்துரை

ஏழு கடன் செயலிகளை நீக்க போலீஸ் பரிந்துரை

ஏழு கடன் செயலிகளை நீக்க போலீஸ் பரிந்துரை


ADDED : ஆக 22, 2025 01:48 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:'ஆன்லைன்' மூலம் கடன் வழங்கும் ஏழு செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்க சைபர் கிரைம் போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் மொபைல் போன் செயலிகளை பதிவிறக்கம் செய்து, ஆதார், வங்கி கணக்கு, பான் கார்டு, புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து கடன் பெறுகின்றனர்.

அவற்றை பயன்படுத்தி கடன் பெற்றவர் உறவினர்களின் மொபைல் போன் எண்களுக்கு, கடன் வாங்கியவரின் போட்டோவை மார்பிங் செய்து, ஆபாச புகைப்படங்களுடன் இணைத்து உறவினர்களின் எண்கள், மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்.

இந்த விபரங்களை அறிந்த உறவினர்கள், கடன் பெற்றவரை தொடர்பு கொண்டு கேட்கும் போது, மன உளைச்சலுக்கு ஆளாகி அதை நீக்குவதற்காக கடன் வழங்கிய நிறுவனங்களை தொடர்பு கொள்கின்றனர். அப்போது, கடன் வழங்கிய தொகையை காட்டிலும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டி மோசடி செய்கின்றனர்.

இம்மாதிரியான மோசடிகளில் தேனி மாவட்டத்தில், இந்தாண்டு ஜன., 1 முதல் தற்போது வரை 168 பேர் பாதிக்கப்பட்டு, புகார் அளித்துள்ளனர். இதை விசாரித்து வரும் தேனி சைபர் கிரைம் போலீசார், கேஸ் ரூபி, கிரெடிட் கிஷாப், குயிக் கேஸ், குயிக் கிரெடிட், ரூபி ப்ரி, ரூபி பார்ட்னர், கிளியர் கிரெடிட், கிரெடிட் கேஸ் உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்களின் ஏ.பி.கே., அப்ளிகேஷன் செயலிகளை, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us