ADDED : பிப் 14, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் , 'அவசர தேவைகளுக்கு விடுப்பு கேட்கும் ஊழியர்களுக்கு டார்கெட் இலக்கை முன்னிருத்தி விடுப்பு வழங்க மறுக்கக்கூடாது.
தபால்துறையை தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி கோட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். செயலாளர் தெய்வராஜ், கோட்டப் பொருளாளர் கணவாமைதீன் முன்னிலை வகித்தார்.
ஏராளமான கிராமிய தபால்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

