sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஐயப்ப பக்தர்களுக்கு தண்ணீர், பழம் வழங்கல் - 16வது ஆண்டாக தொடர் சேவை

/

 ஐயப்ப பக்தர்களுக்கு தண்ணீர், பழம் வழங்கல் - 16வது ஆண்டாக தொடர் சேவை

 ஐயப்ப பக்தர்களுக்கு தண்ணீர், பழம் வழங்கல் - 16வது ஆண்டாக தொடர் சேவை

 ஐயப்ப பக்தர்களுக்கு தண்ணீர், பழம் வழங்கல் - 16வது ஆண்டாக தொடர் சேவை


ADDED : டிச 12, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: சபரிமலைக்கு நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கூடலுாரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சரவணகுமார் 16வது ஆண்டாக தண்ணீர் பாட்டில், பழம் வழங்கி வருகிறார்.

கூடலுாரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சரவணகுமார். டேபிள், சேர் வாடகைக்கு கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளாக சபரிமலைக்கு கூடலுார் வழியாக நடந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சீசன் துவங்கிய தினத்தில் இருந்து முடியும் வரை பக்தர்களுக்கு வழங்குவதுடன் அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று வழி அனுப்பி வைக்கிறார். பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்குவது மனநிறைவு ஏற்படுவதுடன் கூடலுாரில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள குமுளி மலைப் பாதையில் நடந்து செல்லும் போது தண்ணீர் பாட்டில் வாழைப்பழம் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என சரவணகுமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us