ADDED : பிப் 13, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கொடுவிலார்பட்டி வருவாய் கிராமம் நாகலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிவலிங்கநாயக்கன்பட்டியில் (பிப்.,14ல்) நாளை கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
முகாமில் தேனி தாலுகாவிற்கு உட்பட் பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, விபத்து நிவாரணம், வேளாண் திட்டங்கள் உள்ளிட்ட அரசுத்துறைகள் தொடர்பான மனுக்களை நேரில் வழங்கி பயன்பெறாலம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.