
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் நேற்று காலை வெயில் பளிச்சிட்டது.
மதியம் 12:00 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழந்து, வானம் இருண்டு காணப்பட்டது. 12:30 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய துவங்கியது.
சிறிது நேரத்தில் கன மழையாக பெய்தது. வீரபாண்டி, முத்துத்தேவன்பட்டி, அல்லிநகரம், கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் ரோட்டில் நடந்து சென்றவர்கள், நனைந்தவாறு சென்றனர்.

