ADDED : ஏப் 08, 2026 05:56 AM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஸ்ரீ ராம நவமி உற்ஸவம் மார்ச் 27ல் துவங்கி நேற்று வரை நடந்தது.
ஸ்ரீமத் ராமாயணம் ஆன்மிக சொற்பொழிவு முரளி நிகழ்த்தினார். ராமஜனம், சீதா கல்யாணம், கவுசல்யா மங்களாசாசனம், குகன் சத்யா, பாதுகா பட்டாபிஷேகம், சபரி மோட்சம், சுக்ரீவா பட்டாபிஷேகம் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் செய்திருந்தார்.-
