ADDED : மார் 06, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு, : மூணாறில் ரேஷன் அரிசி உள்பட பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாட்டு பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். கொரண்டிக்காடு பகுதியில் எதிரே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரேஷன் பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
லாரியில் இருந்த மூவாற்றுபுழாவைச் சேர்ந்த பாசில் தப்பி ஓடிவிட்ட நிலையில் நவுஷாத் 47,யை கைது செய்து, 111 மூடை ரேஷன் அரிசி, கோதுமை, ஆட்டா மாவு பாக்கெட்டுகள், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

