sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு

/

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு


ADDED : அக் 04, 2025 02:20 AM

Google News

ADDED : அக் 04, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பாசனத்திற்கு செப்.,18ல் வினாடிக்கு 1330 கனஅடி வீதம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது செப்.28ல் வினாடிக்கு 1731 கன அடியாகவும், மறுநாள் வினாடிக்கு 2000 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது.

நேற்று வினாடிக்கு 1130 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் நீரால் பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள ஒரு போக பாசனப்பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 64.40 அடியாக இருந்தது.

அணை மொத்த உயரம் 71 அடி. நீர் வரத்து வினாடிக்கு 768 கனஅடி. மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us