/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை
/
கூடலுார் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை
கூடலுார் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை
கூடலுார் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 11, 2026 05:40 AM
கூடலுார்: கூடலுார் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றியபின் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் ராஜாங்கம் சிலையிலிருந்து பள்ளிவாசல் வரை உள்ள மெயின் பஜாரில் வியாபார நிறுவனங்கள், கடைகள், மருந்து கடைகள் , தனியார் மருத்துவமனைகள் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மேலும் வாகனங்களால் நெரிசல் அடிக்கடி ஏற்படும்.
மெயின் பஜாரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கழிவு நீரோடை அமைத்து ரோடு அமைக்க சமீபத்தில் பணிகள் துவங்கியது. கழிவு நீரோடை கட்டும் பணி 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் தற்போது ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.
துவக்கத்திலேயே ஆக்கிரமிப்புகளை அகற்றி தொடர்ந்து ஆக்கிரமிக்காதவாறு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின் ரோடு அமைத்தால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க முடியும் என பொதுமக்கள் வலியுறுத்துள்ளனர்.

