/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில் ஆர்ச்சில் பெயர் அகற்ற கோரி ரோடு மறியல்
/
கோயில் ஆர்ச்சில் பெயர் அகற்ற கோரி ரோடு மறியல்
ADDED : டிச 04, 2025 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் நுழைவாயிலில் ஆர்ச் உள்ளது. இதில் ஒரு சமுதாயத்தினர் பெயர் எழுதப்பட்டுள்ளது.
அந்தப்பெயரினை அகற்றக்கோரி கைலாசபட்டி காலனி பகுதி மக்கள், கைலாசபட்டி பஸ்ஸ்டாப்- தேனி ரோட்டில் 10 நிமிடம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சவுந்திரபாண்டியன், ஆசிர்வாதம், வெள்ளைச்சாமி உட்பட 11 பேரை தென்கரை போலீசார் கைது செய்தனர்.--

