UPDATED : ஆக 11, 2026 10:07 PM
ADDED : ஆக 11, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
தேனி:அல்லிநகரம் 5வது வார்டிற்கு உட்பட்ட பகவதியம்மன் கோயில் தெரு, கம்பர் தெரு, மச்சால் தெருக்களில் சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணபிரபா தலைமையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில்ரோட்டில் மறியல் செய்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், '10 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் நள்ளிரவில் வழங்குவதால் வேலைக்கு செல்பவர்கள் குடிநீர் பிடிக்க முடிவதில்லை. தண்ணீர் கலங்களாகவும், துர்நாற்றம் வீசுகிறது. முறையாக குடிநீர் வழங்க வேண்டும்,' என்றனர்.
