ADDED : பிப் 13, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு பயணம், புதிய பாதைகள்' என்ற தலைப்பில் நுாற்றாண்டு விழா நடந்தது. அமைப்பின் தென்தமிழக அமைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
பாரதமாத படத்திற்கு மரியாதை செய்து விழா துவங்கியது. ஹிந்து கூட்டு குடும்ப முறையை பின்பற்றுதல், சமுதாய நல்லிணக்கத்தை வீட்டில் இருந்து துவங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்திட கற்றுக்கொடுத்தல், நாட்டின் பாரம்பரிய கலச்சாரம், சுதேசி சிந்தனை வளர்த்தல் உள்ளிட்டவை பற்றி பேசினார். அமைப்பின் மாவட்ட தலைவர் உதயக்குமார், துணைத்தலைவர் திருமூர்த்தி, நிர்வாகிகள் ரஞ்சித்குமார், மகேந்திரன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

