ADDED : அக் 02, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் ஜெய்கிரிஷ் வித்தியாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் கயல்விழி, முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் அசோகா, புங்கை, வேம்பு, சரக்கொன்றை, கொய்யா, நாவல் வகைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மரங்களை பள்ளி அலுவலக பணியாளர்கள் நட்டனர்.
மரங்களை நட்ட பணியாளர்களே மரங்கள் வளரும் வரை அன்றாடம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும், தொடர்ந்து மரங்களை பாதுகாக்கவும் பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

